நம் புராணங்கள் இலக்கியங்கள், சினிமா ஆகிய எல்லா படைப்புகளிலும் எழுதாத சட்டம் ஒன்று உண்டு. ஹீரோ, ஹீரோயின் நல்லவர்களாக இருக்கவேண்டும். ராமர் ஏகபத்தினி விரதர்: சிலப்பதிகாரக் கண்ணகி கற்பு தெய்வம்: எம்.ஜி.ஆர் மது, சிகரெட் தொடமாட்டார், பெண்கள் பின்னால் சுற்றமாட்டார். அழகான பெண்கள்தாம் அவரைத் தொடர்வார்கள். கடந்த பத்தாண்டுகள் வரை, இந்த இலக்கணத்தை உடைத்தவை மிகச் சில படங்களே. வீணை வித்வான் எஸ். பாலச்சந்தர் இயக்கிய அந்த நாள் படத்தில் சிவாஜி ஒரு தேசத்துரோகி. பார்த்திபனின் முதல் இயக்கம், ஹீரோ வாக நடித்த படம் புதிய பாதை.இதில் ஹீரோ ஒரு ரவுடி. வில்லத்தனமானவர்களை ஹீரோவாக்கும் முயற்சிகள் இப்போது சாதாரணமாகிவிட்டன. மங்காத்தாவில் அஜித் ஒரு கிரிக்கெட் கொள்ளைக்காரர்.