வாழ்க்கையை அதனுடைய போக்கிலேயே வாழ விரும்பாதவன். ஒவ்வொரு மனிதனுக்கும் Before and After என்ற ஒரு மாற்றத்திற்கான நிகழ்வு உண்டு அல்லது அதனை தாமாக ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். நமக்கான பாதையை நாமே உருவாக்குவோம். வாழ்வியலின் எளிய நடைமுறைகளை கற்றுக்கொள்ளும் நாட்கள் மிகவும் முக்கியம். நான் கற்றுக்கொள்பவைகளையும் என் பயண அனுபவங்களையும் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
மாற்றத்தின்போது எதிர்கால திட்டங்களை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து அதன் கால அளவுகளையும் குறித்துக் கொள்வது முக்கியம். அதனை தொடர்ந்து பின்பற்றி வருவதோடு அடுத்த இலக்குகளை நிகழ்காலம் நிகழ்கால அனுபவத்தில் இருந்து தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
நம்மிடம் எதனையும் மாற்றிக்கொள்ளாமல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அதேபோல் எதிர்கால திட்டங்கள் மிகவும் அனுபவித்து செயல்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். முழுமையான ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்பு உணர்வோடும் மிக ஆழமாக ஒரு விஷயத்தை உள்வாங்காமல் ஈடுபடும் எந்த செயலும் வெற்றி பெறாது அல்லது சராசரிக்கும் கீழான தரத்தில்தான் இருக்கும். வாழ்க்கை மிக குறுகியது தலைமுறைகள் பயன்படும், போற்றும் ஒன்றாக அது இருக்கட்டும் .